விளையாட்டு
ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள்… பிசிசிஐ ஒப்புதல்
வருகிற 2022-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து விளையாட 2 புதிய ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 2022-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இரண்டு புதிய அணிகள் ஐபிஎல் விளையாட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அஹமதாபாத், பூனே போன்று புதிய அணிகள் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அணிகள் பெயர்கள் உறுதியாகவில்லை.
கூடுதலாக 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் போட்டியை இணைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிசிசிஐ கூட்டத்தொடரில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஐபிஎல் போட்டிகளின் ஏலத்தின் போது அதானி மற்றும் கொயங்கா குழுமத்தார் இடையே பெரும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.