உலகம்
10 கோடி மதிப்பிலான ஓவியம்.. கிழித்து எறிந்த ஓவியர்!
லண்டன்: சிறிய ஓவியம் ஒன்று லண்டனில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஏலம் முடிந்த அடுத்த நொடி அது சுக்குநூறாக கிழிக்கப்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த ஓவியர் பாங்சி. இதில் அவரது ஓவியம் ஒன்று 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
”கேர்ள் வித் ரெட் பலூன்” என்று ஓவியம் 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஏலம் முடிந்த அடுத்த நொடி, இந்த ஓவியம் சுக்குநூறாக கிழிக்கப்பட்டது.
இதற்காக 2006 ஆம் ஆண்டே அந்த ஓவியத்துடன் ஒரு கிழிக்கும் எந்திரத்தை வைத்துள்ளார் ஓவியர் பாங்சி. அழிவுதான் பெரிய கலை, பெரிய அரசியல் என்று ஓவியர் பாங்சி தெரிவித்துள்ளார். அதை மக்களுக்கு உணர்த்தவே இப்படி செய்ததாக அவர் கூறி இருக்கிறார்கள்.
இதை அவர் வீடியோவாகவும் வெளியிட்டு இருக்கிறார். இது விற்கப்பட்டவுடன் கிழிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம் என்றும் கூறியுள்ளார்.