தமிழ்நாடு

வங்கிகள் இனி 2 மணிவரை மட்டுமே செயல்படும்!

Published

on

கொரோனா ஊரடங்கு உத்தரவால், வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துள்ளது.

எனவே, மே 3-ம் தேதி வரை வங்கி கிளைகளைப் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

வங்கி நேரம் குறைப்பு குறித்து வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதற்கட்ட ஊரடங்கின் போது மக்கள் அதிகம் வங்கிகளுக்கு வந்ததால், 4 மணி வரை வங்கி சேவை வழங்கப்பட்டது.

ஆனால், இப்போது ஊரடங்கு நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றுவதால், மக்கள் நடமாட்டம் 1 மணிக்குப் பிறகு குறைந்துவிடுகிறது. எனவே வங்கி சேவை நேரம் 2 மணியுடன் குறைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version