வணிகம்
வீட்டுக் கடன் திட்டங்கள் மீதான வட்டியை குறைத்த பிரபல அரசு வங்கி.. எவ்வளவு தெரியுமா?
பிரபல பொதுத்துறை வங்கி நிறுவனமான பாங்க் ஆப் பரோடா, வீட்டுக் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து குறைந்தபட்சமாக 8.25 சதவீகிதம் என அறிவித்துள்ளது.
பாங்க் பரோடா வங்கி இந்த வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை குறைந்த கால சலுகையாக தான் குறைத்துள்ளது. இருந்தாலும் இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கி நிறுவனங்கள் வழங்கும் 8.40 சதவீதத்தை விட மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கி கடன் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
பாங்க் ஆப் பரோடாவின் இந்த குறைந்த வட்டி விகிதத்தில் திங்கட்கிழமை முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை வீட்டுக் கடன் பெறலாம்.
ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை ஏற்றும் போது எல்லாம் பெரும்பாலான வங்கி நிறுவனங்கள், வீட்டுக் கடன் உள்ளிட்ட திட்டங்களின் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பார்கள்.
ஆனால் எஸ்பிஐ, ஹெச்.டி.எப்.சி உள்ளிட்ட வங்கி நிறுவனங்கள் சென்ற மாதம் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பதற்கு பதிலாக, விழாக்கால சலுகையாக 8.40 சதவிகிதமாக வீட்டுக் கடன் திட்டத்தின் வட்டியை குறைத்து அறிவித்தன.
இப்போது அவர்களுக்கு போட்டியாக பாங்க் ஆப் பரோடா வங்கி தங்களது வீட்டு கடன் வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.