Connect with us

இந்தியா

வங்கி லாக்கர் வைத்திருக்கின்றீர்களா? ஜனவரி 1 முதல் புதிய விதிகள்!

Published

on

வீட்டில் உள்ள நகைகள் உள்பட்ட விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கி லாக்கர் வாடகைக்கு எடுப்பது பலருடைய வழக்கம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது வங்கி லாக்கர் எடுப்பதில் புதிய விதிகள் அமல்படுத்த உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் அனைத்து வங்கி நிர்வாகங்களும் லாக்கர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுடன் இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து முன்னணி வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு புதிய விதி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட லாக்கர் வழிகாட்டுதலை அறிவித்து 2022ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது விதிகளை அமல்படுத்தி அதனை ஜனவரி 1 முதல் புதுப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.

இந்த புதிய விதிகளின் படி லாக்கரில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விலைமதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டலோ அல்லது தீவிபத்து, கட்டிடம் இடிதல், வெள்ளம் போன்ற விபத்து ஏற்பட்டால், கூடிய வங்கி வாடிக்கையாளர்கள் லாக்கரில் வைத்து உள்ள பொருட் களுக்கு இணையாக இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் வங்கி லாக்கர்களை கண்காணிக்க அனைத்து வங்கிகளும் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சிசிடிவியில் உள்ள டேட்டாக்களை 180 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை மோசடியாக எடுப்பதை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் தங்களது லாக்கரை ஓப்பன் செய்யும் போது அந்தந்த வங்கியின் எஸ்எம்எஸ்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாடிக்கையாளர்கள் லாக்கரை வாடகைக்கு எடுக்கும்போது மூன்று ஆண்டுகளுக்கு வாடகையாக செலுத்தவேண்டும். தற்போது லாக்கர் வைத்திருப்பவர்களும் முதலில் இதனை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வங்கி லாக்கரை எடுத்து பயன்படுத்தி வருபவர்கள் மற்றும் புதிதாக எடுப்பவர்கள் 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிகளுடன் கூடிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!