இந்தியா

டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு: சென்னையை பின்னுக்கு தள்ளுமா?

Published

on

இன்றைய ஐபிஎல் போட்டியின் 26வது போட்டி பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்னும் சில நிமிடங்களில் தனது பேட்டிங்கை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியில் ஒரு சில மாற்றங்களும் பெங்களூர் அணியில் ஒரே ஒரு மாற்றமும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கில் தோல்வி அடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. அதே நேரத்தில் பெங்களூர் அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இன்று பெங்களூர் அணி வெற்றி பெற்றால் சென்னையை இரண்டாவது இடத்துக்கு பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை மீண்டும் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இன்னும் சற்று நேரம் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் இன்று இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் இவர்கள் தான்:

பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், ரஜத் படிதார், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷாபஸ் அகமது, டேனியல் சாம்ஸ், ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், சிராஜ், சாஹல்,

பஞ்சாப் அணி: கே.எல்.ராகுல், பிரப்சிம்ரான் சிங், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக்கான், கிறிஸ் ஜோர்டான், ஹர்ப்ரீத் பிரார், ரவி பிஸ்னோய், ஷமி, ரிலே மெரிடித்,

Trending

Exit mobile version