கிரிக்கெட்
பிளே ஆஃப் செல்வது பெங்களூரா? டெல்லியா? மும்பை கையில் இருப்பதால் பரபரப்பு
ஐபிஎல் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே 69வது லீக் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. நேற்றைய போட்டியில் சென்னை அணியை வென்றதன் மூலம் ராஜஸ்தான் அணி 18 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அந்த வாய்ப்பு ராஜஸ்தான் அணிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஆனால் அதே நேரத்தில் டெல்லி அணியை மும்பை அணி வீழ்த்தி விட்டால் பெங்களூரு அணி பிளே ஆப் செல்லுக்கு சென்றுவிடும் என்பது குறிபிடத்தக்கது. எனவே பிளே ஆப் சுற்றுக்கு செல்வது எந்த அணி என்பது இன்று மும்பை கையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது என்றாலும் இந்த போட்டியின் முடிவு புள்ளி பட்டியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடதக்கது.