கிரிக்கெட்
பெங்களூரு அணிக்கு மோசமான தோல்வி: பந்தாடியது பஞ்சாப்!
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி பெங்களூரு அணியை பந்தாடி 34 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 6 புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடிய 92 ரன்களும், கிறிஸ் கெயில் அதிரடியாகப் விளையாடி 46 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 180 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி விராத் கோலி மற்றும் பட்டிதார் ஆகிய இருவரை தவிர மீதி உள்ள அனைவரும் மோசமாக விளையாடினர். கடைசி நேரத்தில் ஹர்ஷர் பட்டேல் அதிரடியாக விளையாடினாலும் அந்த அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 34 ரன்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் அபாரமாக விளையாடிய ஹர்ப்ரீத் பிரார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று பெங்களூர் அணி தோல்வி அடைந்தால் சென்னை முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.