தமிழ்நாடு

புதுவையில் திடீரென பிறப்பிக்கப்பட்ட 144 தடை: என்ன காரணம்?

Published

on

புதுச்சேரியில் இன்றும் நாளையும் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுவைக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகை தர உள்ளார். பிரதமர் வருகையை அடுத்து புதுவையில் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமர் மோடி நாளை புதுச்சேரி செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளதாகவும் அதன் ஒரு நடவடிக்கை தான் இந்த 144 தடை உத்தரவு என்றும் கூறப்படுகிறது. மேலும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் விமானங்கள் பறக்க தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவது அவரது கட்சியின் நிகழ்வு என்றும் இதற்காக ஒரு மாநிலத்தில் மக்களையே தடை உத்தரவு போட்டு முடக்குவது எந்த வகையில் நியாயம் என்று எதிர்க்கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version