தமிழ்நாடு

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Published

on

சென்னை அம்பத்தூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவுக்காக கொண்டு வரப்பட்டு இருந்த கேஸ் பலூன் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் பாடியில், பாஜக விவசாயிகள் அணி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் போது 2 ஆயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டு இருந்தது.

பாடி சிவன்கோவில் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்து ராமன் பங்கேற்றார். அவரை வரவேற்று பட்டாசு வெடித்ததில், தீ பலூன் மீது விழுந்து வெடித்தது.

அப்போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிறிய தீ காயங்களுடன் உயிர் தப்பினர். இதனை அடுத்துக் காவல் துறையினர் செய்த விசாரணையில், அனுமதி இல்லாமல் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, முறையான பாதுகாப்பு வசதி இல்லாமல் கேஸ் பலூன் பறக்கத் திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

கேஸ் பலூனில் ஹீலியம் கேஸ் பதிலாக ஹைட்ரஜன் கேஸ் நிரப்பப்பட்டு இருந்திருக்கலாம். அதனால் தான் தீ பற்றி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version