டிவி

கேட்போர் அனைவரையும் அழ வைத்த பாலாஜி.. ஓடி வந்து கட்டிப்பிடித்த ரியோ!

Published

on

பிக்பாஸ் சீசன் 4-ன் மிகவும் செண்டிமெண்ட்டான ப்ரோமா, இன்றைய 3வது ப்ரோமோ.

கடந்து வந்த பாதை பற்றிய கதை கூறும் நிகழ்ச்சி இன்றுடனும் முடிவடைய உள்ள நிலையில், பாலாஜி தனது கதையைச் சொல்கிறார்.

சின்ன வயதில் தன்னை பள்ளியில் சேர்த்த பிறகு ஒருமுறை கூட என் பெற்றோர் எனது பள்ளிக்கு வந்ததில்லை.

நான் இரவில் தூங்கிக்கொண்டு இருப்பேன். திடீரென்று தலை வலிக்கும். கண் விழித்துப் பார்த்தால் அப்பா குடித்துவிட்டு, கேஸ் டியூப் வைத்துக்கொண்டு நின்று இருப்பார். என்னை அதால் அடித்து இருக்கிறார் என்று அப்போது தான் தெரியும்.

அப்பாவுடன் சேர்ந்து அம்மாவும் மது அருந்துவார்கள். உங்களால் குழந்தையைப் பெற்று வளர்க்க முடியவில்லை என்றால், அதை பெற்று எடுத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று கூற ரியோ ஓடி வந்து பாலாஜியைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுகிறார்.

பிக்பாஸ் வீடே அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்கிறது.

seithichurul

Trending

Exit mobile version