சினிமா செய்திகள்

அண்டாவில் பாலாபிஷேகம்… அடம் பிடிக்கும் சிம்பு!

Published

on

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வரும் பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது.

திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் பெரிய பெரிய கட்-அவுட் வையுங்கள், மேலும், பாக்கெட்களில் அல்ல அண்டாக்களில் பாலாபிஷேகம் செய்யுங்கள் என நடிகர் சிம்பு வீடியோ மூலம் தெரிவித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர், பாலாபிஷேகம், கட்-அவுட் எல்லாம், வேண்டாம் உங்க அம்மாவுக்கு புடவை எடுத்துக் கொடுங்க என நடிகர் சிம்பு கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதனை சமூக வலை தளங்களில், உங்களுக்கு ரசிகர்களே இல்லை. இதில், உங்க கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் யார் செய்வார்கள்? என கலாய்த்தார்கள்.

இதனால், கடுப்பான சிம்பு, நான் பெரிய ஸ்டார்லாம் இல்ல.. எனக்கு இருக்கும் ஒன்னு ரெண்டு ரசிகர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறன்.. பெரிய அண்டாவில் பால் கொண்டு வந்து அபிஷேகம் செய்யுங்க என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பேனர்களுக்கும் கட்-அவுட்டுகளுக்கும் கோர்ட் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சிம்பு இப்படி நேரடியாக வீடியோ மூலம் இவரே கட்-அவுட் மற்றும் பாலாபிஷேகம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பால் முகவர்கள், சிம்புவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version