சினிமா செய்திகள்

விவாகரத்துக்கு பின் மனைவியை சந்தித்த பாலா: கண்கலங்கி பாசமழை பொழிந்ததாக தகவல்!

Published

on

பிரபல இயக்குனர் பாலா சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இருவரும் மீண்டும் சமீபத்தில் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக தம்பதிகளாக இருந்த பாலா மற்றும் முத்துமலர் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். பாலாவின் மகள் அவருடைய மனைவியுடன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் குடும்ப திருமண விழாவில் இயக்குனர் பாலா கலந்து கொண்டார். இதே விழாவில் பாலாவின் மனைவி மற்றும் அவருடைய மகளும் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில் தனது மகளை பார்த்த பாலா அவரை மடியில் தூக்கிவைத்துக்கொண்டு கொஞ்சி அவரிடம் சிரித்து சிரித்து பேசிய காட்சிகள் திருமணத்திற்கு வந்த அனைவரையும் கவர்ந்தன.

ஆனால் அவர் தனது மனைவி முத்து மலரே ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. விழா முடிந்து வீடு திரும்பும் போது தனது மகளை அவர் பிரியும்போது கண்கலங்கிய தாகவும் கூறப்படுகிறது. மனைவி மீது கருத்து வேறுபாடு இருந்தாலும் மகள் மீது அதீத பாசம் வைத்துள்ளார் பாலா என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த பாலா சூர்யா நடிக்கும் திரைப்படத்தை நிலையில் விரைவில் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version