பிற விளையாட்டுகள்

இந்தியாவுக்கு ஆறாவது பதக்கம்: வெண்கலம் வென்ற இந்திய வீரர்!

Published

on

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே ஐந்து பதக்கங்கள் கிடைத்த நிலையில் தற்போது மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா என்பவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சற்றுமுன் விளையாடினார். ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தன்னை தோற்கடித்த கஜகஸ்தான் வீரர் நியாஸ்பெகோவுடன் இன்று பஜ்ரங் புனியா மோதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் மிக ஆவேசத்துடன் இந்த போட்டியில் விளையாடிய நிலையில் இறுதியில் கஜகஸ்தான் வீரர் நியாஸ்பெகோவை 8-0 என்ற கணக்கில் மிக எளிதாக வென்று வெண்கலப்பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா. இதனை அடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியாவுக்கு தற்போது 3 வெண்கல பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளதை அடுத்து தற்போது மேலும் ஒரு வெண்கலம் கிடைத்துள்ளதால் மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அவர்கள் காயத்துடன் தான் விளையாடினார் என்றாலும் அவர் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வெறியோடு விளையாடியதால் அவருக்கு பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version