உலகம்
ராமர் கோவில் கட்ட 25,000 பேர் தேவை.. யாருடைய திட்டம் தெரியுமா?
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பஜ்ரங் தல் 25 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பஜ்ரங் தல் 25 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இப்போதே இதற்கான பணிகளை செய்ய தொடங்கிவிட்டதாக கூறியுள்ளனர். கிராமம் கிராமமாக சென்று இதுகுறித்து சென்று பிரச்சாரம் செய்து கோவில் கட்டுவதற்கு உதவும் வகையில் இளைஞர்களை பணிக்கு அமர்த்த உள்ளனர்.
இதில் பஜ்ரங் தல் அமைப்பினர் எடுத்திருக்கும் முடிவுதான் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி இவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.