சினிமா செய்திகள்
பாகுபலி நாயகன் பிரபாஸின் கெஸ்ட் ஹவுஸுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
டோலிவுட் நடிகர் பிரபாஸின் கெஸ்ட் ஹவுசுக்கு அரசு அதிகாரிகள் திடீரென சீல் வைத்துள்ளனர்.
பாகுபலி படத்தின் மூலம் உலகப் புகழ் அடைந்த நடிகர் பிரபாஸுக்கு, தெலுங்கானாவில் உள்ள ராயதுர்காம் பகுதியில் கெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது.
அந்த இடத்தில் உள்ள 83 ஏக்கர் நிலம் அரசு இடம் என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் மூன்று மாதங்களுக்கு முன்னதாக வழங்கியது.
இதையடுத்து, அந்த பகுதி முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். அதில், ஒரு வீடுதான் நடிகர் பிரபாஸின் கெஸ்ட் ஹவுஸ். அதில், ஆட்கள் யாரும் இல்லாததால், அந்த பங்களாவிற்கும் அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
விரைவில் அனைத்தையும் இடித்து விட்டு, அரசு காரியங்களுக்காக பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் இதுவரை பிரபாஸ் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது