இந்தியா

பிசினஸில் நஷ்டம்: பிறந்த குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற தந்தை!

Published

on

டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டதால் பிறந்த குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆறாவதாக சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்ததூ. குழந்தை பிறந்த போது அந்த குழந்தையின் பெற்றோர்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் குறிப்பாக குழந்தையின் தந்தை செய்துவந்த பிசினஸ் கடும் நஷ்டம் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிறந்த குழந்தையை அந்த குழந்தையின் தாயார் மயக்கத்திலிருந்து கண் விழிப்பதற்கு முன்பே குழந்தையின் தந்தை குழந்தையை எடுத்து ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதில் குழந்தை கடத்தல் கும்பலும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்தது குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தது.

இதனையடுத்து குழந்தையின் தந்தை உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து காவல்துறை வருகிறது. பெற்ற குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற தந்தையால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version