சினிமா செய்திகள்

அஜித் நடிக்க விரும்பவில்லை…. அந்த நடிகையுடன் நடிப்பது கொடூரமானது: பிரபல நடிகர் சர்ச்சை பேட்டி!

Published

on

சின்னத்திரையில் பிரபலமான நடிகராக வலம் வந்த பப்லு பிரித்விராஜ் நடிகர் அஜித், சூர்யா மற்றும் நடிகை ராதிகா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பப்லு பிரித்விராஜ் தெலுங்கு யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் நடிகர் அஜித் குறித்து பேசும்போது, அவர் ரொம்ப இறங்கிவந்து வேலை பார்ப்பார், கூலானவர், ஸ்டைலானவரும் கூட. ஆனால், ஜீரோ டெடிக்கேசன் உடையவர். அவர் நடிக்க விரும்பவில்லை, அதை கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால், அவர் நல்ல அதிர்ஷ்ட்டசாலி. அவர் கைக்கே சூப்பர் ஸ்டார் புகழ் வருகிறது. அவருக்கு நடிப்பதை விட பிரியாணி செய்யதான் அதிக ஆர்வம் இருக்கிறது என்றார்.

தொடர்ந்து நடிகர் சூர்யா குறித்து பேசும்போது, சூர்யா நல்ல டெடிகேட்டிவ் பெர்சன். ஆனால், தன்னை சுற்றியே அனைத்தும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் பயங்கரமான ஒரு நபர். அவருடைய காலம் முடிவுக்கு வந்துவிட்டது என நினைக்கிறேன் என்றார். மேலும் நடிகை ராதிகா குறித்து பேசியவர் அவருடன் நடிப்பது மிகவும் கொடூரமானது என முடித்துக்கொண்டார்.

பிரபல நடிகர்கள் குறித்து இப்படி சர்ச்சைக்குறிய வகையில் பப்லு பிரித்விராஜ் பேசியதற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு வந்துகொண்டிருக்கிறது.

Trending

Exit mobile version