இந்தியா
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும்: பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து!
![Baba Ramdev - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/Baba-Ramdev.jpg)
பிரபல யோகா குருவும், பதஞ்சலி நிறுவன இணை நிறுவனருமான பாபா ராம்தேவ் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அலிகார் நகரில் பதஞ்சலி நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அதில் அவர் பேசிய கருத்துக்கள் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்து அதில் பேசிய பாபா ராம்தேவ், நாட்டில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு கூட்டங்களில் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். நாட்டில் முஸ்லிம் மதம், இந்து மதம் என எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும். இதனால் மக்கள் தொகை குறையும்.
மேலும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், அவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அவர்களின் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் படிக்க இடம் வழங்கப்பட கூடாது. அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவதையம், அரசு பணியில் அமர்த்தப்படுவதையும் நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்தால்தான் மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும் என பேசினார். பாபா ராம்தேவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.