சினிமா செய்திகள்

இன்ஸ்டா கிராமில் குடிபுகுந்த பாகுபலி!

Published

on

பாகுபலி நாயகன் பிரபாஸ் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் அன்புத் தொல்லை தாங்காமல் ஒருவழியாக தனது கணக்கை துவங்கி உள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், பேஸ்புக்கை தவிர வேறு எந்த சோஷியல் மீடியாவிலும் அக்கவுன்ட் வைத்திருக்கவில்லை. பேஸ்புக்கில் மட்டும் அவரை 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சினிமா பிரபலங்கள் அதிகமாக புகைப்படங்களை ஷேர் செய்து வரும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், நடிகர் பிரபாஸ் இணைய வேண்டும் என தினம் தினம் ரசிகர்களின் அன்புத் தொல்லை அதிகரித்துக் கொண்டே போனது.

இந்நிலையில், இதற்கு முடிவு கட்டும் விதமாகவும், ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்யும் விதமாகவும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார் பிரபாஸ்.

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சாஹோ படம் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் விரைவில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version