தமிழ்நாடு
‘அயலான்’ இயக்குனரின் தாயார் மறைவு: திரையுலகினர் இரங்கல்
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது என்பதும் இடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சி இருப்பதால் இவ்வருட இறுதியில் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ‘அயலான்’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளில் இயக்குனர் ரவிக்குமார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென அவருடைய தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமாகிவிட்டார்.
ரவிகுமாரின் தாயார் காலமான செய்தியை ரவிக்குமாரின் நெருங்கிய நண்பரும் இயக்குனருமான கௌரவ் நாராயணன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த திரையுலகினர் இயக்குனர் ரவிகுமாரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
என் நண்பர் & இயக்குனர் ரவிக்குமார் அவர்களின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.. என் ஆழ்ந்த இரங்கல்கள்.
RIP pic.twitter.com/Nz2CSPXxo8— Gaurav narayanan (@gauravnarayanan) March 21, 2021