கிரிக்கெட்

IPL- கொரோனாவிலிருந்து மீண்ட அக்சர் படேல் மீண்டும் டெல்லி அணியுடன் இணைந்தார்

Published

on

கொரோனா தொற்று பாதிப்பால் அவதிப்பட்டு வந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார். இதன் காரணமாக அவர் அணியினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் அக்சருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், அவருக்கு ஏப்ரல் 3-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவருவதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவர் இல்லாத நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 போட்டிகள் விளையாடியது. அதில் 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. தற்பொழுது அக்சர் படேல் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடும் திறமை கொண்டவர். எதிர்பாராத நேரங்களில் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி டெல்லி அணிக்கு பலமுறை வெற்றி தேடித் தந்துள்ளார். அவர் அணியில் இணைந்திருப்பது டெல்லி கேப்பிடல்சுக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

தற்போது டெல்லி அணி, தோல்வியும் வெற்றியும் என மாறி மாறி பதிவு செய்து திணறி வருகிறது. அக்சர், அணிக்குள் வரும் பட்சத்தில் தொடர் வெற்றிகளை டெல்லி அணி குவிக்க வாய்ப்புள்ளது. 

seithichurul

Trending

Exit mobile version