தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு விருது: தமிழக அரசு அறிவிப்பு

Published

on

தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே

இந்தநிலையில் ஆன்லைனில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே உள்ள தொடர்பு ஆன்லைனில் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் ஆசிரியர்களைளின் பாடம் நடத்தும் திறனை ஊக்குவிப்பதற்காக தற்போது இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் அரசு பள்ளிகளில் எஸ்.இ. மற்றும் எஸ்டி மாணவர்களை சேர்க்கும் ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று ஆர்வமுடன் கல்வி தொலைக்காட்சியை பார்க்கிறார்களா என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும் படி பாடம் நடத்துகிறார்களா எனவும் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version