தமிழ்நாடு

இனி ரேசன் கடைகளில் ஆவின் பொருட்கள்: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

Published

on

இனி ஆவின் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளிலும் விரைவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தற்போது ரேஷன் கடையில் அரிசி பருப்பு சர்க்கரை உட்பட அத்தியாவசிய பொருட்கள் மட்டும் விற்பனையாகி வரும் நிலையில் விரைவில் ஆவின் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை விவாதத்தின்போது தெரிவித்துள்ளார்

ஆவின் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் விற்பனைக்கு வந்தால் ஆவின் விற்பனை நிலையங்களில் இருக்கும் விலையை விட குறைவாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆனால் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ஆவின் பொருட்கள் குறைவான விலையில் கிடைக்குமா அல்லது ஆவின் விற்பனை நிலையத்தில் விற்கப்படும் விலையில் தான் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

 

seithichurul

Trending

Exit mobile version