சினிமா செய்திகள்
’ஆட்டோகிராப்’ பாடகர் கோமகன் கொரோனாவுக்கு பலி!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதும் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் உயிர்களை பலி வாங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
ஏற்கனவே தமிழ் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த் உள்பட ஒரு சிலர் சமீபத்தில் கொரோனாவுக்கு பலியான நிலையில் தற்போது பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்
சேரன், சினேகா நடிப்பில் உருவான ’ஆட்டோகிராப்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ என்ற பாடலில் ஒரு சில வரிகளை மட்டும் பாடகர் கோமகன் பாடி இருப்பார் என்பதும், இந்த பாடல் மூலம் அவர் தமிழகம் முழுவதும் பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பாடகர் கோமகன் கொரோனாவால் பலியானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கொரோனாவால் திரையுலக பிரபலங்கள் தொடர்ச்சியாக பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.