தமிழ்நாடு

தமிழிசையிடம் பெட்ரோல் விலை பற்றி கேட்டேன்.. சூழ்ந்து தாக்கினார்கள.. ஆட்டோ ஓட்டுநர் பேட்டி!

Published

on

சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் பேட்டி அளித்து இருக்கிறார்.

பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் என்பவர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார்.சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் பெட்ரோலுக்கே எல்லா பணமும் செலவாகிறது. இதில் எப்படி குடும்பத்திற்கு பணம் கொடுப்பது.அதில் வண்டி வாடகை கொடுக்க கூட பணம் இல்லை என்னிடம்.பெட்ரோல் போடவே வருமானம் சரியாக உள்ளது, என்றுள்ளார்.

இது அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. அந்த ஓட்டுநர் கதீர் தமிழிசை சௌந்தரராஜனின் ஆதரவாளர்களால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்.

அதோடு அவரை கன்னத்தில் அறைந்து தாக்கி இருக்கிறார்கள். இந்த சம்பவம் நடக்கும் போதே, தமிழிசை சௌந்தரராஜன் சிரித்துக் கொண்டு இருக்கிறார்.

 

seithichurul

Trending

Exit mobile version