தமிழ்நாடு

16 வயது சிறுமியுடன் காதல்: 27 வயது ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை!

Published

on

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுக்குள் புகுந்து தனது 16 வயது காதலியை சந்திக்க முயன்ற 27 வயதான ஆட்டோ டிரைவரை உறவினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் பள்ளிப்பாளையம் பெரும்பாறையை சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். 27 வயதான இவருக்கும் ஈக்காட்டூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. திருமணம் செய்ய முடிவெடுத்த இவர்களுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பாக இருந்தனர். பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை என அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தர்மராஜை பார்க்க அவரது காதலி அழைத்துள்ளார். இதனையடுத்து தர்மராஜ் தனது நண்பர் ஒருவருடன் சிறுமியின் வீட்டுப்பக்கம் சென்றுள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்மராஜை தாக்க முயன்றுள்ளனர். பின்னர் அடுத்த நாள் காலை தர்மராஜ் ஈக்காட்டூர் பகுதியில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜின் உறவினர்கள் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்மராஜை அடித்துக் கொலை செய்தனர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தர்மராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சந்தேகத்தின் பெயரில் பெண் வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் தலை மறைவாகியுள்ளனர். போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version