தமிழ்நாடு

பெட்ரோல் விலை பற்றி தமிழிசையிடம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர்.. கன்னத்தில் அறைந்த பாஜகவினர்!

Published

on

சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் என்பவர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. அந்த ஓட்டுநர் கதீர் தமிழிசை சௌந்தரராஜனின் ஆதரவாளர்களால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்.

அதோடு அவரை கன்னத்தில் அறைந்து தாக்கி இருக்கிறார்கள். இந்த சம்பவம் நடக்கும் போதே, தமிழிசை சௌந்தரராஜன் சிரித்துக் கொண்டு இருக்கிறார்.

 

seithichurul

Trending

Exit mobile version