உலகம்
ஆஸ்திரேலியாவில் பரவும் ‘டெல்டா’ கொரோனா; 120 ஆண்டுகளில் இல்லாத சுகாதார நெருக்கடி!
![covid spread - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/covid-spread.jpg)
திங்கட் கிழமையான இன்று ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னியில் 112 பேர் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது ஞாயிற்றுக் கிழமையை விட 45 சதவீதம் அதிக பாதிப்பு ஆகும். இந்நிலையில் அங்கு கடந்த 120 ஆண்டுகளில் ஏற்படாத சுகாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஓராண்டுக்கு முன்னர் கொரோனா தொற்றின் முதல் அலையைத் திறம்பட சமாளித்தது ஆஸ்திரேலியா. அதைத் தொடர்ந்து தற்போது நாட்டின் பல இடங்களில் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து பல இடங்களில் லாக்டவுன் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
சிட்னியில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் முழு லாக்டவுனில் உள்ளது. சிட்னி நகரத்தில் மொத்தம் 60 லட்சம் பேர் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதற்கு காரணம், சரி வர கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தாததே என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
இதுவரை ஆஸ்திரேலியாவில் வெறும் 17.8 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.