கிரிக்கெட்

ஜடேஜா சுழலில் சிக்கி 113 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா: இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டமான இன்று இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலியா 62 ரன்கள் முன்னிலையில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீரர் ஜடேஜாவின் அபார பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி சின்னாபின்னமாகியது.

#image_title

முதல் போட்டியை போன்று இந்த போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 78.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை எடுத்து தனது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

இதனையடுத்து 1 ரன் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 61 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருந்தது. யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத நிலையில் இருந்தது.

#image_title

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் உணவு இடைவேளைக்கு முன்னரே ஆஸ்திரேலிய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இந்தியா. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய வைத்தார். இதனையடுத்து 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்ததால் 1 ரன் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணிக்கு 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 14 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து உணவு இடைவேளைக்கு சென்றுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version