சினிமா செய்திகள்
அத்திவரதரை தரிசித்த நயன்தாரா!
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காஞ்சிபுரம் சென்று அத்திரவரதரை தரிசித்துள்ளனர்.
40 வருடத்திற்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதரின் வைபவம் தற்போது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைப்பெற்று வருகிறது. அத்திவரதரை காண பிரம்மாண்டமான கூட்டம் வருகிறது. கூட்ட நெரிசலில் அத்திவரதரை காண மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அத்திவரதரை காண நள்ளிரவு சென்றுள்ளனர். சமிபத்தில் ரஜினிகாந்தும் அவரது மனைவி லதாவுடன் சென்று அத்திவரதரை வழிபட்டது குறிப்பிடத்தக்கது.