சினிமா செய்திகள்
ஆழ்வார்க்கடியன் கதாபாத்திரத்திற்கு செட் ஆவாரா ஆதி?
கன்னித்தீவு எப்போது முடியும் என்பது போல மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு எப்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று உள்ளது.
தினமும் பொன்னியின் செல்வன் குறித்த பல தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் லேட்டஸ்ட் கதாபாத்திரமாக நடிகர் ஆதி இணைந்துள்ளார்.
அரவாண், ஈரம் போன்ற படங்களில் நாயகனாக நடித்த ஆதி, கடைசியாக தமிழில் சமந்தாவின் யுடர்ன் படத்தில் போலீசாக நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும், அது ஆழ்வார்க்கடியன் எனும் திருமலை கதாபாத்திரம் என்றும் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.