சினிமா செய்திகள்

பா.ரஞ்சித் படத்தில் 3-வது முறையாக ஹீரோ ஆக இணைந்த ‘அட்டக்கத்தி’ தினேஷ்!

Published

on

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பா.ரஞ்சித் உடன் மூன்றாம் முறையாக ஹீரோ ஆக இணைந்துள்ளார் ‘அட்டக்கத்தி’ தினேஷ்.

இயக்குநர் ஆக பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன படம் அட்டக்கத்தி. இந்தப் படத்தின் கதை நாயகனாக தினேஷ் நடித்திருப்பார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட குண்டு படத்தில் மீண்டும் தினேஷ் நாயகன் ஆக நடித்திருந்தார்.

நடுவில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் தினேஷ் நடித்திருப்பார். இம்முறை மீண்டும் ஹீரோ ஆக பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கிறார் தினேஷ். இந்தப் படத்தில் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர்களின் ஒருவரான சுரேஷ் மாரி என்பவர் இயக்க உள்ளார். படத்தின் முன்கட்டப் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

பா.ரஞ்சித் அடுத்ததாக தற்போது நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் உடன் இணைந்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். சார்பட்டா நாயகி துஷாரா தான் நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் நாயகி ஆக நடித்து வருகிறார்.

 

Trending

Exit mobile version