சினிமா

அட்லிக்கு ஆப்பு வைத்து சென்னைக்கே திருப்பி அனுப்பினாரா ஷாருக்கான்?

Published

on

தளபதி விஜய் நடித்த மூன்று ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி ஷாருக்கான் நடித்து வரும் லயன் என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் இந்த திரைப்படம் ட்ராப் ஆகி விட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன்பின்னர் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கினார் என்பதும் இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்ற போதிலும் தயாரிப்பாளர்களுக்கு சல்லிக்காசு லாபம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷாருக்கான் நடித்து வரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை அட்லி இயக்கி வந்தார் என்பதும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஷாருக்கானின் மகன் கைது உள்பட ஒருசில காரணமாங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது அவர் வேறொரு இயக்குனரின் படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு மேலாக ஷாருக்கான் படத்திற்காக காத்திருந்த அட்லி இதுகுறித்து ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்த போது இப்போதைக்கு இந்த படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்றும் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை முடித்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனல் அட்லி அப்செட்டாகி சென்னைக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் விஜய்யுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க அவர் வாய்ப்பு கேட்ட போது இரண்டு வருடங்களுக்கு வாய்ப்பில்லை என்று விஜய்யும் கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் அட்லி மிகவும் அதிர்ச்சியில் இருப்பதாக கோலிவுட்டில் ஒரு கிசுகிசு மிக வேகமாக பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version