கிரிக்கெட்

இரண்டாவது இன்னிங்ஸ்ஸிலும் விக்கெட் மழை: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் எடுத்த அஸ்வின்!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அஸ்வின் மிக அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து கணக்கை தொடங்கி உள்ளார்.

முன்னதாக முதல் இன்னிங்சில் இந்திய அணி 365 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் சற்று முன்னர் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அதில் தொடக்க ஆட்டக்காரரான கிராஹ்லி மற்றும் பெயர்ஸ்டோ ஆகிய இருவரும் அஸ்வினின் பந்து வீச்சில் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர். சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 19 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக முதல் இன்னிங்சில் இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக விளையாடி 96 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார் என்பதும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதமடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version