கிரிக்கெட்

டேய் மாமா நீ சூப்பர்டா.. இங்கிலாந்து போட்டியில் தமிழில் கலக்கும் அஸ்வின் தினேஷ் கார்த்திக்!

Published

on

லண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில், தமிழக வீரர்கள் அஸ்வினும், தினேஷ் கார்த்திக்கும் தமிழில் பேசி கலக்கி வருகிறார்கள்.

இந்தியாவும், இங்கிலாந்து தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தின் ஒன்பது விக்கெட்டை வீழ்த்தியது. அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் எடுத்தார்.

இந்த போட்டியில் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் என்ற மூன்று தமிழக வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அவர்கள் மூன்று பேரும் தமிழிலேயே பேசிக்கொள்கிறார்கள்.

நேற்று நடந்த போட்டியில், தினேஷ் கார்த்திக் அஸ்வினுக்கு தமிழில் நிறைய பாராட்டுக்கள், அறிவுரைகளை தமிழில் கூறினார். அவர்கள் மாமா, மச்சான் என்று பேசிக்கொண்டது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version