உலகம்

வீட்டை சுத்திகரிக்க சொன்னதால் கோபம்.. பாட்டியை கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட 11 வயது சிறுவன்

Published

on

நியூயார்க்: அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் அமெரிக்காவின் அரிசோனாவில் நடந்து இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன் தனது 65 வயது பாட்டியை நெற்றியில் சுட்டு கொலை செய்துள்ளான்.

வீட்டை சுத்தம் செய்யும்படி பாட்டி கூறியதால் இந்த கொலையை அவர் அந்த சிறுவன் செய்ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுவனின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியாகவில்லை. தனது பாட்டியை அந்த சிறுவன் சுடும் முன் திட்டியதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் அந்த மூதாட்டியின் கணவர் வேகமாக வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அதனது மனைவியை தூக்கிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக முயன்றுள்ளார்.

ஆனால் அதற்குள் இன்னொரு துப்பாக்கி சத்தமும் கேட்டுள்ளது. உடனே தனது மனைவியை கீழே வைத்துவிட்டு அந்த முதியவர் தனது பேரனின் அறைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவனும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு பலியாகி உள்ளான்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version