கிரிக்கெட்
ஆசிய கோப்பை இறுதி போட்டி: இந்தியா திணறல்.. வங்கதேசம் அதிரடி பேட்டிங்!
அபுதாபி: இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேசம் அதிரடியாக பேட்டிங் செய்கிறது.
ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று நடக்கிறது. இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோர் விளையாடுகிறார்கள்.
டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு செய்துள்ளது. ஆனால் இந்திய அணி மோசமாக பந்து வீசுகிறது.
இது இந்திய பவுலர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. வங்கதேசம் அணி 14 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்துள்ளது.