கிரிக்கெட்
ஆசிய கோப்பை இறுதி போட்டி: டாஸ் வென்ற இந்தியா.. வங்கதேசம் முதலில் பேட்டிங்!
அபுதாபி: இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது.
ஆசிய கோப்பை போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று இறுதி போட்டி நடக்கிறது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோர் விளையாடுகிறார்கள்.
இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு செய்துள்ளது.