கிரிக்கெட்

யார் என்று தெரிகிறதா? இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனி ஆளாக கலக்கும் அஸ்வின்!

Published

on

லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இதில் அஸ்வின் மீண்டும் பார்மிற்கு வந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

அஸ்வின் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வந்தார். சாஹல், குல்தீப் என்ற இரண்டு ரிஸ்ட் பவுலர்கள் வந்தபின் அஸ்வின் கொஞ்சம் கொஞ்சமாக ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின் டெஸ்ட் வீரர் மட்டுமே என்ற நிலைக்கு அவர் சென்றார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனி ஆளாக கலக்கும் அஸ்வின்!

இந்த நிலையில் தற்போது அஸ்வின் மீண்டும் முழு பார்மிற்கு வந்துள்ளார். நேற்று முதல் நாள் நடந்த இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக நான்கு விக்கெட் எடுத்தார்.

இன்று இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் 3 விக்கெட் எடுத்துள்ளார். தனி ஆளாக அவர் இங்கிலாந்தின் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களை கலங்கடித்துக்கொண்டு வருகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் தன்னை நீருபித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version