கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் அஸ்வின்: இதுதான் காரணம்!

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இருபதாவது போட்டியாக டெல்லி மற்றும் ஐதராபாத் அணியில் விளையாடியது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் டெல்லி அணியின் முன்னணி பந்து வீச்சாளரான அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டரில் அஸ்வின் விளக்கமளித்துள்ளார். தனது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் இருக்க வேண்டிய நிலை இருப்பதால் தற்காலிகமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுகிறேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் தனது குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து குணமானவுடன் மீண்டும் அணியில் சேர்ந்து கொள்வேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து டெல்லி அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அஸ்வினின் குடும்பத்தினர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி அணியில் அஸ்வின் தற்காலிகமாக விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவு தான் என்றாலும் மாற்று வீரரை வைத்து டெல்லி அணி சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version