கிரிக்கெட்
குக்கை விடாது துரத்தும் அஸ்வின்.. இரண்டாவது இன்னிங்ஸிலும் நிகழ்ந்த அதிசயம்!
லண்டன்: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் குக், மீண்டும் அஸ்வினின் சுழலில் விக்கெட்டை இழந்து இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் மிகவும் வலுவான பவுலிங்கை இந்தியா கொண்டுள்ளது.
ஆனால் மோசமான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருக்கிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டிற்கு 287 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா 10 விக்கெட்டிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் தன்னுடைய ஆப்-ஸ்பின் மூலம் நான்கு விக்கெட் எடுத்தார். குக், ஸ்டோக்ஸ், பட்லர், போர்ட் ஆகியோர் விக்கெட்டை எடுத்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் குக் விக்கெட்டை தொடக்கத்திலேயே எடுத்துள்ளார். இதனால் இந்த போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணி திணற தொடங்கி உள்ளது.
இதோடு அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 8வது முறையாக குக் விக்கெட்டை எடுக்கிறார். 2016ல் இருந்து அஸ்வின் பந்தில் குக் விக்கெட்டை இழந்து வருகிறார்.