சினிமா செய்திகள்

மலையாள ரீமேக் படத்தில் அசோக் செல்வன்- பிரியா பவானி சங்கர்..!

Published

on

நடிகர் அசோக் செல்வன் உடன் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

ஓ மை கடவுளே மூலம் 2020-ம் ஆண்டின் ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை அளித்தவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தற்போது தனது புதிய திரைப்படத்துக்காக பிரியா பவானி சங்கர் உடன் இணைந்துள்ளார். 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ’அடி கப்யரே கூட்டாமணி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படைப்பாக இப்படம் அமைய உள்ளது.

அசோக்- பிரியா ஜோடியுடன் நடிகர்கள் நாசர், முனிஷ்காந்த், ரவி மரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குநர் சுமந்த் இயக்குகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான சதுரம்-2 படத்தை இயக்கியவர். தற்போது அசோக் செல்வனின் கைகளில் ரெட் ரம் மற்றும் 2 தெலுங்கு படங்கள் உள்ளன. பிரியா பவானி சங்கருக்கு குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், இந்தியன் 2, பொம்மை, ஓ மணப்பெண்ணே ஆகிய படங்கள் வரிசையாக உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version