இந்தியா

ஆர்யன்கான் நிரபராதி: குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்

Published

on

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், போதை பொருள் வழக்கில் சிக்கி இருந்த நிலையில் அவர் நிரபராதி என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பயில் உள்ள சொகுசு கப்பலுக்கு சென்ற ஷாருக்கான் மகன் ஆரியன்கான் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மாதம் சிறையில் இருந்த பின்னரே ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் போதை பொருள் தடுப்பு அதிகாரி ஒருதலைபட்சமாக விசாரணை செய்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கையில் கைது செய்யப்பட்ட ஆர்யன்கானிடம் இருந்து எந்த வித போதை பொருட்களும் இல்லை என்றும் அவருடைய செல்போனை வாங்கி பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சோதனையை வீடியோ எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் இந்த வழக்கில் தனித்தனியாக பிடிபட்ட போதைப் பொருள்களை ஒரே நபரிடம் பெற்றது போல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விசாரணை குழு கண்டறிந்துள்ளது.

இதனை அடுத்து குற்றப்பத்திரிக்கையில் போதை கடத்தல் தொடர்பான குற்றவாளிகள் பட்டியலிலிருந்து ஆர்யன்கான் பெயர் நீக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் நிரபராதி என்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைத்த குழு தெரிவித்துள்ளது. இதனால் ஷாருக்கான் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version