சினிமா செய்திகள்

ஐதராபாத்தில் கோலாகலமாக நடந்த ஆர்யா – சாயிஷா திருமணம்!

Published

on

டிவி நிகழ்ச்சி வரை இறங்கி பெண் தேடிய நடிகர் ஆர்யாவுக்கு இறுதியாக கஜினிகாந்த் படம் மூலம் அறிமுகமான நாயகி சாயிஷா மனைவியாக கிடைத்து விட்டார். நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா ஜோடியின் திருமணம் நேற்று ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

 

ஜீவா இயக்கத்தில் உள்ளம் கேட்குமே படத்தில் ஆர்யா அறிமுகமானார். ஆனால், அந்த படம் வெளிவரும் முன்னமே, வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யா வில்லனாக அறிமுகமானாலும், அவரது நடிப்பு பலராலும், பாராட்டப்பெற்று, தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக ஆர்யா மாறினார்.

மதராசபட்டினம், நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜாராணி போன்ற பல வெற்றி படங்களை நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவுக்கு தந்துள்ளார்.

சமீபகாலமாக பெரிய வெற்றி படங்கள் நடிகர் ஆர்யாவுக்கு அமையாததால், டிவி ரியாலிட்டி ஷோவான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில், தனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.

கடைசியாக எதிர்பார்த்ததை போலவே, 16 பெண்களுக்கு சுயம்வர போட்டிகள் நடத்தி, இறுதியில் வெற்றி பெற்றவரையும் கழட்டி விட்டுவிட்டு எஸ்கேப் ஆனார்.

இந்நிலையில், கஜினிகாந்த் படத்தில் நடித்த நடிகை சாயிஷாவுடன் ஆர்யாவுக்கு காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் பரவின. ஆனால், இந்த முறை அந்த கிசுகிசுக்களை உண்மையாக மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆர்யா – சாயிஷா இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால், இஸ்லாமிய முறைப்படி நேற்று மாலை ஐதராபாத்தில் அவர்களது திருமணம் நடைபெற்றது. பின்னர், நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இந்த நட்சத்திர ஜோடியை வாழ்த்தினர்.

மேலும், திருமண நாளான நேற்று, ஆர்யாவின் அடுத்த படமான டெடி படத்தின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version