Connect with us

இந்தியா

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு பாரத ரத்னா: பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

Published

on

இந்தியாவில் கொரோனா முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதமும் இரண்டாவது அலை இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் இந்த இரண்டு அலைகளிலும் சேர்த்து லட்சக்கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் இதில் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிக மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவர்கள் சங்கம் சமீபத்தில் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி வழங்கியுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கொரோனா காரணமாக உயிரிழந்த மருத்துவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் பல மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் உயிரைத் தியாகம் செய்து இருப்பதாக கூறியுள்ளார்.

எனவே கொரோனா காரணமாக உயிரிழந்த மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்குவது தான் அவர்களுக்கு தேசத்தின் சார்பில் வழங்கப்படும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். தங்களது உயிரையும் குடும்பத்தினரையும் பற்றி கவலைப்படாமல் பாடுபட்டு வருவதாகவும் எனவே இதை விட அவர்களை பெருமை படுத்துவதற்கு வேறு சிறந்த வழி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட அனைத்து இந்திய மாநிலங்களின் முதல்வர்களும் பிரதமருக்கு இந்த கோரிக்கையை வைக்க வேண்டுமென்றும் அவ்வாறு வைத்தால் கண்டிப்பாக கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!