இந்தியா

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000: முதல்வர் வாக்குறுதி

Published

on

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.

டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தற்போது தேசிய கட்சியாக உருவாகி வருகிறது. குறிப்பாக அந்த கட்சி பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கும் நிலையில் இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பிரபலமான ஒருவர் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதே போல் கோவா மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சில கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வருகிறார்.

அவற்றில் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதி காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களின் ஓட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு விழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version