இந்தியா

பெண்களுக்கு மாதம் ரூ.1000: முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

Published

on

பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும் ஒரு வீட்டில் எத்தனை பெண்கள் இருந்தாலும் அத்தனை பெண்களுக்கும் இந்த பணம் வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் பணம் வழங்கப்படும் என திமுக உள்பட பல்வேறு கட்சிகள் தமிழக தேர்தலின்போது வாக்குறுதிகள் அளித்தன என்பதும் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதே போன்ற ஒரு வாக்குறுதியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தற்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்/ ஒரு வீட்டில் மூன்று பெண்கள் இருந்தாலும் அவர்களுக்கும் தனித்தனியாக இந்த தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளதால் பெண்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version