சினிமா செய்திகள்
’அருண்விஜய் 33’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
பிரபல இயக்குனர் ஹரி தற்போது அருண்விஜய் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் 32 திரையுலக பிரபலங்கள் இந்த படத்தின் போஸ்டரை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி சற்று முன் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’யானை’ என்ற அட்டகாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் நான்கு புதிய போஸ்டர்கள் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர்கள் தற்போது மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2002ஆம் ஆண்டு ’தமிழ்’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான ஹரி, அதன் பின்னர் சாமி, அருள், ஆறு , தாமிரபரணி, சிங்கம் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கி உள்ளார் என்பதும் கடந்த 2018 ஆம் ஆண்டு சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து தனது மைத்துனர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக ராமேஸ்வரம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, அம்மு அபிராமி, ராதிகா நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.