சினிமா செய்திகள்
தமிழ் சினிமா தரம் கெட்டதற்கு அஜித் விஜய்யே காரணம்: அருண்பாண்டியன்
தமிழ் சினிமா தரம் கெட்டு போனதற்கு அஜித் விஜய்யே முக்கிய காரணம் என நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருணாஸ் நடித்த ’ஆதார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிராஜா, அருண்பாண்டியன், தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய அருண்பாண்டியன்,’நாங்கள் திரைப்படத்தில் நடிக்கும் போது 10 சதவீதம் மட்டுமே சம்பளமாக பெற்றோம் என்றும் 90% படத்திற்கு செலவழிப்போம் என்றும் பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் இருந்த காலம் தான் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றும் தற்போது தமிழ் சினிமா மிக மோசமான கட்டத்திற்கு சென்று உள்ளது என்றும் கூறினார் .
அஜித். விஜய் போன்ற பெரிய நடிகர்கள் படத்தின் பட்ஜெட்டில் 90% சம்பளமாகப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் மீதி உள்ள 10 சதவீதத்தில் மட்டும்தான் படத்திற்கு செலவழிக்கப் படுகிறது என்றும் இதனால் தமிழ் சினிமா தரமற்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அண்டை மாநிலங்களில் உள்ள திரைப்படங்கள் எல்லாம் தமிழகத்தில் வசூலை குவித்து வரும் நிலையில் தமிழ் படங்கள் தோல்வி அடைவதற்கு காரணம் சம்பளம் அதிகம் ஆனது தான் என்றும் அருண் பேசியிருப்பது பரபரபபி ஏற்படுத்தியுள்ளது.